ட்ரெண்டிங்

வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே தேமுதிகவினர் மனித சங்கிலி போராட்டம்!

 தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செப்.09) காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சென்னை போரூரில் தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அந்த வகையில், சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுங்கக் கட்டணத்தைத் தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய கட்சியினர், வரும் காலங்களில் சுங்கக் கட்டண உயர்வைத் தடுத்து, கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

அத்துடன், தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தினர்.