ட்ரெண்டிங்

இருசக்கர வாகனம் மீது வாகனம் மோதி கோர விபத்து- 2 பேர் உயிரிழப்பு!

சேலம் மாவட்டம், அரியாகவுண்டம்பட்டி கீழ் தெருவைச் சேர்ந்தவர் கங்காதுரை (வயது 34). வெல்டிங் தொழிலைச் செய்து வரும் இவர், தனது நண்பரான சசிகுமார் (வயது 34) என்பவரை அழைத்துக் கொண்டு, கடந்த செப்டம்பர் 07- ஆம் தேதி அன்று தாரமங்கலத்தில் இருந்து சேலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். 

 

இருசக்கர வாகனத்தை சசிகுமார் இயக்கிய நிலையில், இரும்பாலை முதல் கேட்டில் உள்ள கணபதிபாளையம் கடந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சசிகுமார், கங்காதுரை இருவரும் கீழே விழுந்தனர். இதனைப் பார்த்த சாலையோரம் சென்றவர்கள், கங்காதுரையை சேலம் அரசு மருத்துவமனைக்கும், சசிகுமாரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

 

எனினும், கங்காதுரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள இரும்பாலை காவல்துறையினர், விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.