ஆன்மிகம்

மாணவிகளுக்கு அபாகஸ் கிட் வழங்கிய ஆசிரியர்!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நிலவாரப்பட்டியில் அமைந்துள்ளது கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி. இந்த பள்ளியில், 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை சுமார் 100 மாணவிகள் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளிக்க, குரால் நத்தம் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் தெய்வநாயகம், அவரது சொந்த செலவில் ஒரு ஆசிரியரை நியமித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கும் மேலாக அந்த ஆசிரியர் பள்ளி மாணவிகளுக்கு அபாகஸ் பயிற்சி அளித்து வருகிறார். 

இந்நிலையில், அந்த பள்ளியைச் சேர்ந்த 40 மாணவிகளுக்கு ரூபாய் 4,000 மதிப்பில் அபாகஸ் பயிற்சி கிட்டை ஆசிரியர் தெய்வநாயகம், அவரது மனைவியான ஒண்டியூர் அரசுப் பள்ளி ஆசிரியை ஜெயசித்ரா ஆகியோர் வழங்கினர். 

இதேபோல், கடந்த ஆண்டு இதே பள்ளி மாணவிகளுக்கு போர்வை, ஸ்வெட்டர் ஆகியவையை ஆசிரியர் தெய்வநாயகம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.