ஆன்மிகம்

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; 14வது முறையாக பரபரப்பு !


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்...14 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்...

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மதியம் ஒரு மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் வந்துள்ளது. இதனை பார்த்த ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் சேலம் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வெடிகுண்டு  தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து நான்கு தளங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் உடைமைகள் வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 14வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது....