ட்ரெண்டிங்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்தா? தள்ளிப்போகவா?” – ஆட்சி மாற்றத்தால் தேர்வர்கள் அதிர்ச்சி!

 

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி லட்சக்கணக்கான தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட 2026 தேர்வு அட்டவணையில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

 

ஆனால் தற்போது புதிய அரசு வந்துள்ளதால், தேர்வு முறை மாற்றம், புதிய பாடத்திட்டம் அல்லது நிர்வாக மாற்றங்கள் காரணமாக தேர்வுகள் தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனால் அரசு வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

அதே நேரத்தில், காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால், திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் “தேர்வு நடக்குமா? இல்லையா?” என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.