ஆன்மிகம்

புஷ்ப அலங்காரத்தில் அத்திவரதர்.....குவியும் பக்தர்கள்! 

ஜூலை 01 முதல் ஜூலை 06 வரை சேலம் மாவட்டம், பட்டைக்கோவில் கனகராஜ கணபதி தெரு பரமக்குடி நன்னுசாமி தெரு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் பஜனை மடத்தில் ஸ்ரீ அத்திவரதர் இன்று (ஜூலை 03) புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

சேலம் மட்டுமின்றி நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் மாலை பஜனை பாடல்கள் நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது. மனமுருக சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் பக்தர்கள். நாள்தோறும் மாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வெளியே வந்த நாளில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் எழுந்தருளியிருப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.