ட்ரெண்டிங்

விஷச்சாராயம்- ஆட்சியர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது. 

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது. 

அப்போது நீதிபதிகள், கல்வராயன் பகுதி மக்கள் சமூக பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இது தொடர்பாக, தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். 

அத்துடன், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.