ட்ரெண்டிங்

நல்ல தலைவர்கள் வர வேண்டுமா? வேண்டாமா?- விஜய் கேள்வி

சென்னை திருவான்மியூரில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா இன்று (ஜூன் 28) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. 

மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றிய நடிகர் விஜய், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது தந்தை என்ற முறையில் எனக்கு அச்சகமாக உள்ளது; போதைப்பொருளைக் கட்டுப்படுத்த ஆளும் அரசு தவறிவிட்டது என்பது குறித்து நான் பேச வரவில்லை. அரசாங்கத்தை விட நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். 

மாணவர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்; உங்கள் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்துங்கள். பெற்றோரை விட அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்களைத் தேர்வுச் செய்ய வேண்டும். நன்றாகப் படித்தவர்கள் தலைவர்களாக வர வேண்டும் என்றார். 

மேலும், நல்ல தலைவர்கள் வர வேண்டுமா? வேண்டாமா? என மாணவ, மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.