ட்ரெண்டிங்

ஆதார் அடையாள அட்டை அப்டேட்- பொதுமக்களின் கவனத்திற்கு! 

ஆதார் அடையாள அட்டையை இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆதார் அடையாள அட்டையில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே இரண்டு முறை நீட்டித்திருந்தது. தற்போது பொதுமக்களின் வசதிக்காக மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அடையாள அட்டையை அப்டேட் செய்துக் கொள்ள ஆதார் ஆணையம் பயனாளிகளுக்கு கால அவகாசம் வழங்கும். 

அந்த வகையில், தற்போது இதற்கான ஏற்பாடுகளை ஆதார் ஆணையம் செய்துள்ளது. ஆதார் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய பயனாளர்கள் அதற்கான இணையதளம் அல்லது ஆதார் மையங்களுக்கு சென்று சேவையை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காலக்கெடு நிறைவடைந்த பிறகு அப்டேட் செய்யப்படாத ஆதார் அடையாள அட்டை ரத்துச் செய்யப்பட மாட்டாது எனவும், ஆதார் அமைப்பு கூறியுள்ளது.