ட்ரெண்டிங்

ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை 12.8% அதிகரிப்பு!

 

ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கையும், சரக்குப் போக்குவரத்தும் கடந்த 2023- ஆம் ஆண்டு அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரயில்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 12.8% ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை ரயில்களில் 52.8 கோடி பேர் பயணித்துள்ளனர். டிசம்பர் வரை சரக்குப் போக்குவரத்தும் 6% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை 29.35 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றுமதி செய்ததில் ரூபாய் 2,651 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதால், ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் மேலும் உயரும் என்று தெற்கு ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.