ட்ரெண்டிங்

விக்கிரவாண்டியில் ஜூலை 10- ல் இடைத்தேர்தல்! 

விக்கிரவண்டியில் வரும் ஜூலை 10- ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் மொத்தம் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்; இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14- ஆம் தேதி தொடங்கும்; வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஜூன் 21- ஆம் தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் ஜூலை 13- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.