விளையாட்டு

ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா! 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு ரூபாய் 20 கோடிக்கு பரிசுத்தொகையுடன், கோப்பையையும் வழங்கினார் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா. அதேபோல், இரண்டாமிடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சுமார் 12.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. 

ஐ.பி.எல். கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் வீரர்கள், சக அணி வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

கொல்கத்தா அணி வெற்றி பெற்றதை அடுத்து, அதன் உரிமையாளர் ஷாருக்கான், கிரிக்கெட் மைதானத்தில் தனது அணியின் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.