ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 10) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 196 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி சார்பில் கில் 104, சாய் சுதர்சன் 103 ரன்கள், மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மிட்செல் 63, மொயின் அலி 56 ரன்கள், துஷார் தேஷ் பாண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக 1,000 ரன்களை எடுத்து சச்சின் சாதனையை முறியடித்தார் சாய் சுதர்சன். 31 இன்னிங்ஸில் சச்சின் 1,000 ரன்களை கடந்த நிலையில் 25 இன்னிங்ஸில் 1,000 ரன்களை சுதர்சன் கடந்தார்.