விளையாட்டு

5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 

தர்மசாலாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியை பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக பும்ரா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெய்ஷ்வால், சுப்மன் கில், ரஜத் படித்தார், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

முகமது ஷமி வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து உடல் தகுதியை நிரூபிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.