ட்ரெண்டிங்

சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் கைது!


ஓமலூர் அருகே சிறுமியைக் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடந்துச் சென்ற 15 வயது சிறுமியை டெம்போ வாகனத்தில் கடத்திய இரண்டு சிறுவர்கள், வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சிறுவர்கள் இருவரும் சிறுமியைக் கட்டிப்போட்டு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, அவர்களது நண்பர்களை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமையை ஈடுபடுத்தியது தெரிய வந்தது. அத்துடன், சிறுமியை வீடியோவும் எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், நடந்ததைக் கூற முடியாமல் அழுந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவர்கள் இருவரை கைது செய்தனர். 

விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர்கள் ஏற்கனவே வன்கொடுமை செய்திருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மீது வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.