ஆன்மிகம்

முருகன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறவில்லை.... கையெழுத்து இயக்கத்தை நடத்திய DYFI

சேலத்தின் பெருமைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய ஆன்மீக தலங்களில் சிறப்பு மிக்க ஒன்றாக இருந்து வருகின்ற குமரகிரி முருகன் கோயிலின் திருப்பணிகள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஆமையின் வேகத்தை விட மிகவும் குறைவான வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், சில ஆண்டுகளாக எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகின்றது. 

இதனால் இந்த கோயில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் மதுக்குடிக்கும் பாராக இருந்து வருகின்றது. இதனால் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கும், இப்பகுதி மக்களுக்கும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) சேலம் கிழக்கு மாநகரம், அம்மாப்பேட்டை கிளை சார்பில் இன்று (ஜூலை 11) தமிழக அரசின் கவன ஈர்ப்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து, அம்மாப்பேட்டை பகுதி மக்களிடம் கையெழுத்துக்களைப் பெற்று, தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளனர்.