ட்ரெண்டிங்

முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மீது நடிகர் கருணாஸ் புகார்! 

நடிகைகளைத் தொடர்புப்படுத்தி தன் மீது அவதூறு பரப்பி வரும் முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி ஏ.வி.ராஜு மற்றும் யூடியூப் சேனல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், நடிகருமான கருணாஸ் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிகர் கருணாஸ் அளித்துள்ள புகாரில், முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி ஏ.வி.ராஜு, தன் மீதுள்ள வன்மத்தால் அருவருக்கத்தக்க வகையில், அவதூறு பரப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்காக, உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், அது தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவித்துளளார். 

அந்த காணொளியை வைத்து பல யூடியூப் சேனல்கள், அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஏ.வி.ராஜுவின் இந்த பொய்யான பேட்டியால் தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.