ட்ரெண்டிங்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப்.19 முதல் விருப்ப மனு"- தி.மு.க. அறிவிப்பு!

 

மக்களவைத் தேர்தல் போட்டியிட பிப்.19- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. 

 

இது குறித்து தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.

 

போட்டியிட விரும்புகின்ற தி.மு.க.வினர் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, வரும் மார்ச் 01- ஆம் தேதி முதல் மார்ச் 07.- ஆம் தேதி மாலை 06.00 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பப் படிவத்தை ரூபாய் 2,000 செலுத்தி பெற்றுக் கொண்டு, பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது வேட்பாளர் கட்டணமாக ரூபாய் 50,000 செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.