ட்ரெண்டிங்

சேலம் விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்யக் கோரி எம்.பி. கடிதம்!

 

சேலம் விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்யக்கோரி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், "சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அதிக விமானங்கள் இயக்கும் வகையில் ஓடுபாதையை 1,800 மீட்டரில் இருந்து 3,000 மீட்டராக விரிவாக்கம் செய்ய வேண்டும். போயிங் 777, ஏர்பஸ் A350 ரக விமானங்கள் செல்லும் வகையிலும், நிறுத்தும் வகையிலும் ஓடுபாதை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

 

இதன்மூலம் இரவு நேரங்களிலும் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்க முடியும். அதேபோல், டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் சேலத்தில் இருந்து விமானங்கள் இயக்க வழிவகை ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.