ஆன்மிகம்

அயோத்தி கோயிலில் குழந்தை சிலை நிறுவப்பட்டது!

 

அயோத்தியில் மூலவரான குழந்தை ராமரின் 4.25 அடி உயர சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது. 

 

குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் மலர் வைத்து பிரதமர் நரேந்திர மோடி வணங்கினார். நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் குழந்தை ராமர் சிலை முன் பிரதமர் மனமுருக பிரார்த்தனை செய்தார். குழந்தை ராமர் சிலைக்கு தீபாராதனை காட்டி பிரதமர் பிரார்த்தனை செய்தார். 

 

ராமர் பிறந்த பூமி என நம்பப்படும் அயோத்தியில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளதால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்று ராமர் சிலை நிறுவப்பட்டது. புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு கருவறைத் தூய்மைப்படுத்தப்பட்டு பிரதிஷ்டை வைபவம் நடந்தது. 

 

அழகிய வேலைப்பாடுகளுடன் ரூபாய் 2,000 கோடி மதிப்பில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.