ட்ரெண்டிங்

மகரவிளக்கு பூஜை- சபரிமலைக்கு சிறப்பு ரயில்!

 

மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜனவரி 16- ஆம் தேதி அன்று காலை 03.00 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 09.00 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

 

மறுமார்க்கத்தில், ஜனவரி 16- ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.