ஆன்மிகம்

பொங்கல் பண்டிகை: யஷ்வந்த்பூர்- கொச்சுவேலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலைச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, யஷ்வந்த்பூர்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 13- ஆம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலிக்கும், ஜனவரி 14- ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து யஷ்வந்த்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

நள்ளிரவு 11.55 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 07.10 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், இரவு 10.00 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 04.30 மணிக்கு யஷ்வந்த்பூரை சென்றடையும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்; இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.