ட்ரெண்டிங்

தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை!

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவுநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மலர்வளையம் வைத்தும், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவியும் மரியாதைச் செய்தார். 

அதைத் தொடர்ந்து, ஈரோடு பிரிவு ரோட்டில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் நினைவு மண்டபத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை அமைச்சர் மரியாதைச் செலுத்தினார். 

இந்த நிகழ்வின் போது, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு உயரதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.