ஆன்மிகம்

கனமழை, வெள்ளப்பெருக்கு- நான்கு ரயில் சேவைகள் ரத்து!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நான்கு ரயில் சேவைகளை ரத்துச் செய்து தெற்கு ரயில்வே.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவை (ரயில் எண் 06846) இன்றும் (டிச.18), ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் சேவை (ரயில் எண் 06845) நாளையும் (டிச.19), கோவை- நாகர்கோவில் ரயில் சேவை (ரயில் எண் 16322) நாளையும் (டிச.19), ஈரோடு- திருச்சி ரயில் சேவை (ரயில் எண் 06612) நாளையும் (டிச.19) ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவுச் செய்தவர்களுக்கு முழுத்தொகையும் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.