ட்ரெண்டிங்

பயணிகளின் கவனத்திற்கு.... முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 

எர்ணாகுளம்- தன்பாத் இடையே இருமார்க்கத்திலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் டிச.18, 25 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத்திற்கும், டிச.21, 28 ஆகிய தேதிகளில் தன்பாத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

இந்த சிறப்பு ரயில்கள், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.