ட்ரெண்டிங்

பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்!

 

சேலம் மாநகராட்சியின் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 17- வது வார்டில் மத்திய நிதிக்கு குழு மானியமாக ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், ஓமலூர் பிரதான சாலை வடபுறம் பிருந்தாவன் சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அதேபோல், ரூபாய் 1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் ஓமலூர் பிரதான சாலை வடபுறம் மழைநீர் வடிகால் பணிக்காக, மேயர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தினகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

16-வது வார்டில் மார்கபந்து சாலையில் மத்திய நிதிக் குழு மானியமாக ரூபாய் 51 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் வடிகால் பணிகளை பூமி பூஜை செய்து மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.