ட்ரெண்டிங்

கோவை- பரௌனி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

 

கோவை- பரௌனி இடையே இருமார்க்கத்திலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் டிசம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் கோவை- பரௌனி முன்பதிவில்லா சிறப்பு ரயிலும், வரும் டிசம்பர் 14, 21, 28 ஆகிய தேதிகளில் பரௌனி- போத்தனூர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் இயக்கப்படும். 

 

இந்த ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது