ட்ரெண்டிங்

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வேலூர் அணி!

மாநில அளவிலான சாப்ஃட் டென்னிஸ் போட்டியில் வேலூர் மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாநில அளவிலான 14-வது சப்-ஜூனியர் சாப்ஃட் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. 24 மாவட்டங்களை 325 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடிய போட்டியினை மாவட்ட தலைமை நீதிபதி சரவணன் தொடங்கி வைத்தார். 

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டப் போட்டிகளில் வேலூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணிக்கு வெற்றி கோப்பையையும், ரொக்கப் பரிசையும், பதக்கங்களையும்,  பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். 

அதேபோல், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த அணிக்கும் கோப்பைகளும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.