ட்ரெண்டிங்

சோனா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்!

 

சேலம் ஜங்சன் ரயில் நிலையம் அருகில் உள்ள சோனா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள வள்ளியப்பா கலையரங்கில் இன்று (டிச.09) காலை 11.00 மணிக்கு நடந்த 22- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் கலந்து கொண்டார்.

 

 

கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்பித்தார்.

 

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வேல்ராஜ் கலந்து கொண்டு 25 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த 42 மாணவ, மாணவிகள் உட்பட 1,331 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

விழாவில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சிறந்த உள் கட்டமைப்பு, மாணவர்களை சிறந்தவர்களாக தயார்படுத்துதல், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் சோனா கல்லூரி சிறந்து விளங்குவதால்தான் பல விருதுகளை பெற்றுள்ளது என்றனர். 

 

 

மேலும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு வரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத் தந்து வருகிறார்கள் என்றும், இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.