ட்ரெண்டிங்

அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

 

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 167-வது நினைவுத் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட மைய நூலகம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான அ.தி.மு.க. நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். இதில், சேலம் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், எம்.கே.செல்வராஜ், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையிலான தி.மு.க.வினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

அதேபோல், தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகளும், மாணவர் அமைப்புகள், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டோரும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.

 

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அரசியல் கட்சியினரின் வருகையையொட்டி, சேலம் மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ள சாலையில் 50- க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.