ட்ரெண்டிங்

10 ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி....அலைமோதிய இளைஞர்கள் கூட்டம்!

 

சேலம் காசகானூர் மெயின் ரோட்டில் ஸ்ரீ முருகன் மெஸ் என்ற பெயரில் உணவகம் இன்று (டிச.08) திறக்கப்பட்டுள்ளது.

 

திறப்பு விழா சலுகையாக, ஒரு சிக்கன் பிரியாணி 10 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்தால் மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்றும், முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நபர் ஒருவருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

100 நபருக்கு மேல் வரும் நபர்களுக்கு ரூபாய் 50 கட்டணத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

 

இந்த தகவலை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் குழு குழுவாக, உணவகம் முன்பு திரண்டிருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிரியாணிக்காக, நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த இளைஞர்கள் பிரியாணியை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.