ட்ரெண்டிங்

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு ஒத்திவைப்பு!

 

மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான பால், உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

 

இந்த நிலையில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, வரும் டிசம்பர் 24- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.