ட்ரெண்டிங்

நெய்க்காரப்பட்டியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா!

 

சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று (டிச.08) காலை 08.45 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

 

ஓதுவார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பின்னர் தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

 

கும்பாபிஷேக விழாவையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.