ட்ரெண்டிங்

சேலம் சரக காவல் ஆய்வாளர்கள் 19 பேர் பணியிட மாற்றம்!

 

சேலம் காவல் சரகத்திற்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 19 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து, சேலம் சரக காவல்துறை டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, ஓமலூர் காவல் ஆய்வாளர் செல்வராஜன் ராசிபுரத்திற்கும், அங்கிருந்த சுகவனம் வெண்ணந்தூருக்கும், வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் அரூருக்கும், அரூர் காவல் ஆய்வாளர் வாழப்பாடிக்கும், பர்கூர் காவல் ஆய்வாளர் சவிதா மோகனூருக்கும், கிருஷ்ணகிரி ஆய்வாளர் கபிலன் நாமக்கல்லுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேபோல், காவல் ஆய்வாளர் லோகநாதன் ஓமலூர் காவல் நிலையத்திற்கும், விஜயலட்சுமி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், உஷாராணி சேலம் மாவட்ட பணியிடைப் பயிற்சி மையத்திற்கும், கலைவாணி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.