ட்ரெண்டிங்

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம்!

 

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழாவில் சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று (டிச.05) மாலை 06.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் புத்தகத் திருவிழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்) கீதாபிரியா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.