ட்ரெண்டிங்

ரயில்கள், ரயில் நிலையங்களில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

 

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை, ஜங்சன் காவல்துறையினர் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (வயது 43) என்பது தெரிய வந்தது. அதேபோல், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதையும், சாகுல் ஹமீது ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, சாகுல் ஹமீது வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் வைத்திருந்த பைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், அதனை சோதனை செய்தனர். அதில், சாகுல் ஹமீது தான் கொள்ளையடித்து வைத்திருந்த பணம், தங்கநகைகளை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், நீதிபதி உத்தரவின் பேரில், நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.