ட்ரெண்டிங்

நாணயத்தை விழுங்கிய குழந்தை....வெற்றிகரமாக நாணயத்தை வெளியே எடுத்து மருத்துவர்கள் அசத்தல்!

 

சேலம் மாவட்டம், எருமாபாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது 3 வயது குழந்தை கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டது. அந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதன் இரைப்பையில் நாணயம் சிக்கி இருப்பது தெரிய வந்தது. பல்வேறு முயற்சிகள் செய்தும் குழந்தையின் வயிற்றில் இருந்து நாணயம் வெளியே வரவில்லை.

 

இதையடுத்து, அந்த குழந்தையை சேலம் நான்கு ரோட்டில் உள்ள நிதிஷ் அதிநவீன குடல் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவசங்கர், எண்டோஸ்கோபி மூலமாக ‘பாரின் பாடி ரேட் டூத் போர்சப்ஸ்’ எனப்படும் நவீன கருவி வழியாக குழந்தையின் வயிற்றில் இருந்த நாணயம் வெளியே எடுக்கப்பட்டது.

 

தற்போது குழந்தை நலமாக உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் நிதிஷ் மருத்துவமனை தலைமை டாக்டர் சிவசங்கர் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.