ட்ரெண்டிங்

நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 

தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4- ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், தினம்தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி. ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எனது அரசு அல்ல; நமது அரசு 4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

நாடும் மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தைத் தொடர்வேன் எனத் தெரிவித்துள்ளார்.