ட்ரெண்டிங்

ஹுப்ளி- கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்!

 

ஹுப்ளி- கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் டிசம்பர் 02- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 20- ஆம் தேதி வரை ஹூப்ளியில் இருந்து கோட்டயத்திற்கும், வரும் டிசம்பர் 03- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 21- ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும்.

 

இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள், சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், எர்ணாகுளம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.