ட்ரெண்டிங்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்- கேள்விகளை அனுப்புமாறு சேலம் எம்.பி. அழைப்பு!

 

வரும் டிசம்பர் 04- ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கேள்விகளை அனுப்புமாறு தொகுதி மக்களுக்கு சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் டிச.04- ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மற்றும் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் துறை சார்ந்த கேள்விகளையும், எனது சேலம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாடு - திட்டங்கள் அரசு பணிகள் குறித்து கேள்விகளையும் என்னுடைய mpofficesalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவித்தால் அவற்றை உங்களின் சார்பாக தொகுத்து, குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, ஒன்றிய அரசின் பதிலையும், அவற்றின் நிலைப்பாட்டையும், அறிந்து திட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுப்பேன் என இதன் மூலம் உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.