ட்ரெண்டிங்

விசாகப்பட்டினம்- கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்கள் குறித்த விரிவான தகவல்!

 

சபரிமலை சீசனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினம்- கொல்லம் இடையே இரு மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை சீசனைத் தொடர்ந்து, சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லத்திற்கும், கொல்லத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

 

வரும் நவம்பர் 29- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லத்திற்கும், நவம்பர் 30- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 01- ஆம் தேதி வரை கொல்லத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

 

இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.