ட்ரெண்டிங்

சேலம் உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

 

சேலம் உள்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை நிலவரம் குறித்து சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, கரூர், விருதுநகர், திருச்சி ஆகிய 27 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று (நவ.26) இரவு 07.00 மணி வரை மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.