ட்ரெண்டிங்

கோட்டை மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர்!

 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சேலம் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கோயிலை சுற்றிப் பார்த்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகிகள் பிரசாதம் வழங்கினர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர்களால் நிராகரிக்க முடியாதபடி, சட்டங்களை இயற்ற வேண்டும். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் குண்டு வைத்தவர்களை விடுவிக்கக்கோரி, தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களின் அரசியலமைப்புச் சட்டங்களைக் காப்பது ஆளுநரின் கடமை. ஆளுநரின் சம்பளம் மாநில அரசுப் போடும் பிச்சை என்றால் அமைச்சர்கள் வாங்கும் சம்பளம் யார் பிச்சை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.