ட்ரெண்டிங்

சேலத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம், நாமக்கல், கரூர் உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று (நவ.25) இரவு 07.00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.