ட்ரெண்டிங்

சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடி மகிழ்ந்த எம்.எல்.ஏ.!

 

சேலம் மாவட்டத்தில் சிறுவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் அருள் கோலி குண்டு விளையாடி அசத்தினார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே கோட்கவுண்டம்பட்டி கிராமத்தில் சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பூமிப் பூஜை செய்து சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

 

பின்னர், அங்குள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருள், அவர்களுடன் இணைந்து கோலி குண்டு விளையாடினார். இருப்பினும் சிறுவர்களுடனான கோலி குண்டு விளையாட்டில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தோல்வி அடைந்தார்.