ட்ரெண்டிங்

ஒரு கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் பறிமுதல்! 

சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பது அம்மாப்பேட்டையில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள இராமலிங்கத் தெருவைச் சேர்ந்தவர் சபீர் (வயது 32). ரவுடியான இவரது வீட்டில் அம்மாப்பேட்டை காவல்துறையினர் இன்று (மே 24) அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பண மதிப்பிழப்பின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருந்த ரூபாய் 500, ரூபாய் 1,000 நோட்டுகளை கட்டுக்கட்டாக வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், சபீர் மீது வழக்குப்பதிவுச் செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்லாத ரூபாயின் மதிப்பு சுமார் ரூபாய் 1 கோடி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.