ட்ரெண்டிங்

சபரிமலை சீசன்: சேலம் வழியாக சென்னை- கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்ப

 

சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயம் வரை இன்று (நவ.19) முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கோட்டயம் இடையேயும், கோட்டயம்- சென்னை சென்ட்ரல் இடையேயும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.  

 

இன்று (நவ.19), நவம்பர் 26, டிசம்பர் 03, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், நவம்பர் 20, 27, டிசம்பர் 04, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 07.00 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

 

இந்த சிறப்பு ரயில்கள், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். இந்த சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.