ட்ரெண்டிங்

மயானத்தை நேரில் சென்று பார்வையிட்ட எம்.எல்.ஏ. அருள்!

 

சேலம் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி ஊராட்சியில் உள்ள சேலத்தாம்பட்டி மயானம் சுற்றுச்சுவர் இடிந்தும், பராமரிப்பின்றியும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இது குறித்து தகவலறிந்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அருள், மயானத்திற்கு நேரில் பார்வையிட்டார்.

 

அதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து பேசிய அருள் எம்.எல்.ஏ. ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தனது சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடுச் செய்து மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித் தருவதாக அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.