ட்ரெண்டிங்

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள்!

 

தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முடிந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அதேபோல், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.

 

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், ஓசூர் ஆகிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று (நவ.13) மட்டும் 70 பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில், காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அதேபோல், சேலம் டவுன் ரயில் நிலையம் மற்றும் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திலும் ரயில்வே காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.