ட்ரெண்டிங்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து!

 

சேலம் மாவட்டம், அயோத்தியப்பட்டணம் அருகே உள்ள ராமர்கோவில் சாலையில் லோடுகளை ஏற்றுக் கொண்டு வந்துக் கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டு, லாரியை சாலையில் நிறுத்திவிட்டு, தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்; சரக்குகளை ஏற்றுக் கொண்டு வரும் லாரிகள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளனர்.